Our Feeds


Monday, June 27, 2022

SHAHNI RAMEES

பாணந்துறை கெசல்வத்தை பாடசாலை ஒன்றின் அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட சடலம்!


 பாணந்துறை கெசல்வத்தை பிரதேச பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினமிரவு (25) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் வகுப்பறைகள் மூடப்பட்டிருப்பதை கண்ணுற்ற  காவலாளி இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த நபர் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார் பி.பி சஞ்சீவ லக்மால் தலைமையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »