(எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை கடன் உதவி பெறுவதற்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் காத்திருக்கவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் நாடு எதிர்கொண்டு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரி இருக்கும் கடன் தொகை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் கடன் உதவி கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவிகளை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பல முறைமைகள் காணப்படுகின்றன,
இந்நிலையில் தற்போது அரசாங்கம் கோரி இருக்கும் கடன் உதவியை பெற்றுக்கொள்ள இந்த வருடம் இறுதிவரை எதிர்பார்க்கவேண்டி வரும். அதற்கு முன்னர் எமக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.