Our Feeds


Wednesday, June 1, 2022

ShortNews

JUST_IN: துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி - கைது செய்ய புறப்பட்டது CID.



வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெயிலிமீரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தை செயற்படுமாறும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், துமிந்த சில்வாவிற்கு வெளிநாடு செல்லவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »