Our Feeds


Friday, July 1, 2022

SHAHNI RAMEES

இலங்கைக்கு அவசர கையிருப்பு நிதியாக 1 பில்லியன் டொலர்கள் - IMF தீர்மானம்

 

இலங்கைக்கு அவசர கையிருப்பு  நிதியாக 1 பில்லியன் டொலர்களை வழங்க  IMF தீர்மானம்


இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி daily news வெளியிட்ட தகவலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தொகையை கடனாக அன்றி கையிருப்பாக  நிதி வைப்புச் செய்யப்படவுள்ளதோடு இதன் மூலம் வெறுமையாக உள்ள இலங்கை கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களாக உயர இருக்கிறது.

இதனூடாக வேறு நாடுகளின் உதவிகளை பெற வாய்ப்பாக அமையுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் நாட்டுக்கு வந்தது.

இந்தக் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்‌ச , பிரதமதர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தனர்.

ஒரு வார காலம் நாட்டியில் தங்கியிருக்கும் இப் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »