Our Feeds


Sunday, July 10, 2022

SHAHNI RAMEES

இராஜினாமா செய்வதாக கூறிய ஜனாதிபதியின் மற்றுமொரு அறிவிப்பு..!

 

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தவுடன், எரிவாயு விநியோகம் உடனடியாக இடம்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினமும் மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »