தாய்லாந்தின் பல பிரதேசங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் தென் பகுதியில் 17 பிரதேசங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.