Our Feeds


Monday, August 22, 2022

ShortNews

விமல், வாசு, கம்மன்பில மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்! - சம்பிக்க வலியுறுத்து



விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீன அணி உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.


விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி உருவாக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

”ராஜபக்சக்களை லீகுவான் எனவும், மீட்பார்கள் எனவும் பரப்புரைகளை முன்னெடுத்து மக்களை ஏமாற்றியதில் பெரும் பங்கு அவர்களுக்கும் உள்ளது. எனவே, நாடு இந்நிலைமைக்கு வருவதற்கு அவர்களும் காரணம்.

சுயாதீனமாக செயற்படும் உரிமை அவர்களுக்கு உள்ளது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.” – எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »