Our Feeds


Monday, August 22, 2022

ShortTalk

உற்பத்தியிலிருந்து விலகுவோம்! - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை!



(இராஜதுரை ஹஷான்)

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானியை இரத்துச் செய்யாவிடின் முட்டை உற்பத்தியில் இருந்து விலகுவோம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு 1 இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை தண்டபணம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும், நிறுவன ரீதியில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு 5 இலட்சம் ரூபா முதல் 50 இலட்சம் ரூபா வரை தண்டபணம் விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையின் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் , வர்த்தமானியின் விலைக்கமைய முட்டை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆராய நுகர்வோர் அதிகார சபை கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »