சிறைச்சாலை நிறுவனங்களில் வழங்கப்படும் உணவு தரமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து முற்றாக நிராகரிக்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறைகளுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான கைதிகள் வந்து செல்கின்றனர் என்றும், இதுவரை அப்படி எந்த பிரச்சனையும் எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் இருந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், ரஞ்சன் ராமநாயக்க, உணவின் நிலை குறித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யவில்லை எனவும் ஏகநாயக்க குறிப்பிட்டுள்ளார்.