Our Feeds


Wednesday, August 17, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய நிறுவனத்துக்கு அனுமதி!

 

மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான தற்காலிக அனுமதியை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் 2 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான முதலீடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் எனவும் அதற்கான தற்காலிக அனுமதி இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.





இந்த மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் மூலமாக மன்னார் மின் நிலையத்திலிருந்து 286 மெகா வொட்டும், பூநகரிலிருந்து 234 மெகா வொட்டும் உற்பத்தி செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (16) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »