Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

வெளிநாட்டிலுள்ள மனைவியை வரவழைப்பதற்காக கணவன் செய்த காரியம்: குளியாப்பிட்டியில் சம்பவம்..!

 

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து  கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார் எனக் கூறப்படும் நபர் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைப்பிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும், மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தந்தையின் இந்தச் செயலால் அவரது மகன் பயந்த நிலையில் காணப்படுவதனை குறித்த வீடியோ காட்டுகிறது.




இது தொடர்பில் தகவலறிந்த குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மகனை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

5 வயதான அவரது மகள், தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன், தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »