Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

ஐ.தே.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்களுக்கு மீண்டும் வாசிக்குமாறு கோரும் வஜிர எம்.பி.


2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின்

விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக வஜிர அபிவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »