Our Feeds


Wednesday, August 31, 2022

SHAHNI RAMEES

BREAKING: அருந்திக்க,ஜோன்ஸ்டன் உள்ளிட்ட எம்.பிக்களின் வீடுகளுக்கு தீ வைத்த 7 பேர் கைது.!


மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்

போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, தீ வைத்து எரித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, தாரக பாலசூரிய, ரோஹித குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 26, 44, 61, 53, 35, 32, 58 வயதுடைய லிஹினியாகம, ஹொரணை, கேகாலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஹொரணை மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »