இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்கு கணக்காய்வாளர் நாயகத்திற்கு நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.