Our Feeds


Tuesday, September 13, 2022

SHAHNI RAMEES

ஆயுதங்களை ஏற்றிச் சென்ற லொறி கண்டி -மஹியங்கனை வீதியில் விபத்தில் சிக்கியது..!

 


ஆயுதங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கண்டி -மஹியங்கனை வீதியின் 18ஆவது வளைவு பகுதியில் நேற்று (12) விபத்துக்குள்ளானது.

குண்டசாலை பொலிஸ் பயிற்சி பாடசாலையில் பொலிஸ் பயிலுனர்களுக்கு துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி வழங்க எடுத்துச் செல்லப்பட்ட ஆயுத லொறியே மஹியங்கனை 11ஆவது வளைவுக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



இந்த லொறியில்பயிற்சிக்கு தேவையான ரி- 56 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஏற்றப்பட்டிருந்தன.

இந்த விபத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில், சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் லொறியில் பயணம் செய்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »