மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 15 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மருந்துகள் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனைய மருந்துகள் உள்ளூர் விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.