Our Feeds


Sunday, November 20, 2022

ShortNews

ஆட்கடத்தல்! ஓமானில் மற்றுமொரு அதிகாரி பணி இடைநீக்கம்



ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற இலங்கைப் பெண்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய இ. கே. குஷன் என்ற நபரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரை இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »