Our Feeds


Tuesday, November 1, 2022

SHAHNI RAMEES

#BREAKING: கட்டார் தலைநகரில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்...!

 

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளதையடுத்து கட்டார் தலைநகரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகிறது. போட்டியை காண வரும் ரசிகர்கள் தலைநகர் டோஹாவில் தங்கும் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.

பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »