(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஜீ சேர்ப்(GCERF) நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் வை-சென்ச் y-change திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் உள்ள இளைஞர்கள் யுவதிகளை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வதிவிடப் பயிற்சிப் பட்டறை அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
இதனடிப்படையில் தனி மனித மாற்றம்,முரண்பாட்டு முகாமைத்துவம், அதி தீவிர வன்முறையை தவிர்த்தல்,சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தை மேம்படுத்தல் தொடர்பில் 03 நாள் வதிவிடப் பயிற்சி கடந்த (28,29,30) ஆம் திகதிகளில் பொத்துவிலில் இடம்பெற்றது
இதில் வளவாலராக டி.மோசஸ் கலந்து கொண்டதுடன், சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவன வை-சென்ச் y-change திட்டத்தின் திட்ட முகாமையாளர் டி.ராஜேந்திரன்,திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான ரோகிணி, டப்ளியு.எம். சுரேகா, எம்.எல்.ஏ.மாஜீத், சமாதான தொண்டர்களான டி.டிலக்சி, எம்.எஸ்.ரக்சானா, மொழி பெயர்ப்பாளர் ஜே. நித்தியானாந்தன், உட்பட கல்முனை, கல்முனை வடக்கு, உஹன, நிந்தவூர் ஆகிய பிரதேச இளைஞர் நல்லிணக்கமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.