Our Feeds


Thursday, January 26, 2023

ShortTalk

இரவோடு இரவாக பண்ணையிலிருந்து 240 கோழிகள் திருட்டு.



ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்து 240 கோழிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கோழிப்பண்ணையின் கூண்டுகளின் இரும்பு கம்பிகள் அறுத்து கோழிகளை பைகளில் எடுத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருடப்பட்ட போது கோழிப்பண்ணையில் சுமார் 2000 கோழிகள் இருந்ததாக அதன் உரிமையாளர் துமிந்த குமார நவரத்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »