Our Feeds


Thursday, January 26, 2023

ShortTalk

இலங்கைக்கு ஹெலிகொப்டர் வழங்கும் இத்தாலி!



மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இத்தாலி தெரிவித்துள்ளது.


இந்நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மனேலா இணக்கம் தெரிவித்துள்ளார்.


நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் இக்கட்டான நேரத்தில் இத்தாலியினால் இலங்கைக்கு வழங்கப்படக்கூடிய ஆதரவு தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »