Our Feeds


Tuesday, January 24, 2023

News Editor

இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தியது ஐ.எம்.எப்.


 இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணங்களை வழங்குவதில் இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்கால சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையில் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையில் நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வலுப்பெறும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »