Our Feeds


Tuesday, January 31, 2023

ShortNews Admin

பௌத்த மத அவமதிப்பு - சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!



சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதற்கமை, பெப்ரவரி 14 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.


பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »