Our Feeds


Tuesday, January 24, 2023

ShortNews Admin

JUST_IN: ஆனந்த மற்றும் சஞ்சீவ தம்மிக்கவுக்கு விளக்கமறியல்.



மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


குறித்த இருவரும் இன்று கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »