Our Feeds


Monday, February 27, 2023

News Editor

இத்தாலியில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு


 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை , உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 


கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். 


அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. 


இதில், 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். 


இதுவரை 59 உடல்களை மீட்டுள்ள இத்தாலி கடலோர மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இத்தாலி கடற்பகுதியில் படகு விபத்தில் 59-க்கு மேற்பட்ட அகதிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »