Our Feeds


Wednesday, February 1, 2023

ShortNews

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இங்கிலாந்து, அமெரிக்கா வலியுறுத்தல்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.


அதன்போது உரையாற்றிய பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்


அத்துடன், ஓரினச் சேர்க்கையை குற்றமாக்குவதை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவின் கூட்டத்தில், நாட்டின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »