Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?

 



நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் முறையற்ற வரி வசூலிப்பிற்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, ஏனைய அனைத்து துறையினரும் ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »