Our Feeds


Thursday, March 9, 2023

ShortTalk

எங்களுக்கு எப்-16 போர் விமானங்கள் கண்டிப்பாக தேவை - அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது உக்ரைன்!



உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகின்றது.


இந்த நிலையில் , உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 



அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் கூறியதாவது:- 


அமெரிக்கா எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றது என்பது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான செய்தியாகும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமெரிக்கா நம்புகின்றது. 


எங்களுக்கு எப்-16 போர் விமானங்கள் கண்டிப்பாக தேவை. இந்த போர் விமானங்கள்தான் ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் வெற்றியை தீர்மானிக்கும். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் முறையிட்டு இருக்கிறோம். அது செயல்படுத்தப்படும் என்று அவர் என்னிடம் கூறினார். 


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடந்த விவாதத்தின் போது, தற்போது போர் விமானங்கள் தேவையில்லை என்று ஜோ பைடனும், அவரது உதவியாளர்களும் கூறினர். அப்போது எங்களுக்கு அந்த போர் விமானங்கள் தேவை என்று கூறினேன். 


மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம். இதனால் எங்களுக்கு போர் விமானங்கள் அவசரமாக தேவை. ரஷ்ய ஜனாதிபதி புதினை நம்ப முடியாது என்பதால் அவரை சந்திக்கமாட்டேன். 


ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை. ஏனென்றால் புதின் அவரது வார்த்தையை கடைபிடிக்கவில்லை. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் நாட்டில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும். அதன்பிறகே தூதரக ரீதியாக பேச்சில் சேர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »