Our Feeds


Wednesday, March 8, 2023

ShortTalk

பொருளாதார நெருக்கடியிலும் வெளிப்பட்ட நேர்மை - வீதியில் கிடைத்த பணத்தை உரியவை தேடி ஒப்படைத்த நபர்!



எஸ். அஷ்ரப்கான்


வீதியில் கண்டெடுத்த 10 ஆயிரம் ரூபா பணத்தை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உரிய நபரிடம் நேற்று (07) ஒப்படைத்துள்ளார்.


பெரிய நீலாவணையை சேர்ந்த எஸ். ஜெயகாந்தன் என்பவரின் 10 ஆயிரம் ரூபா பணம் கல்முனை பிரதான வீதி ஹற்றன் நெஸனல் வங்கிக்கு அருகாமையில் வைத்து கடந்த 2023.02.16 அன்று தொலைந்துள்ளது.


இந்த பணத்தை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எம்.எம். நகீப் எனும் ஆசிரியர் ஒருவர் கண்டெடுத்திருந்தார்.


இந்த நிலையில், அந்தப் பணத்தை அவர் கற்பிக்கும் பாடசாலையான கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் வைத்து நேற்று (07) பணத்தை தொலைத்த எஸ். ஜெயகாந்தனிடம், பாடசாலை அதிபர் ஏ.எச். அலிஅக்பர்  முன்னிலையில் வழங்கினார்.


இதன்போது ஆசிரியருக்கு பணத்தை தொலைத்த எஸ். ஜெயகாந்தன் நன்றி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »