Our Feeds


Sunday, March 5, 2023

SHAHNI RAMEES

சில அரச அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு..!

 

நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.



எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (03) வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »