Our Feeds


Tuesday, May 16, 2023

ShortNews Admin

துருக்கி ஜனாதிபதி தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை - 28ம் திகதி மீண்டும் தேர்தல்!



துருக்கியில் 2003 ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஜனாதிபதி தையிப் அர்துகான் ஆட்சி செய்து வருகிறார். 


இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 


இதில் தற்போதைய ஜனாதிபதி தையிப் அர்துகானும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கமாலும் போட்டியிட்டனர்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் ஜனாதிபதி தையிப் அர்துகான் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். 


எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார்.


துருக்கியை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். 


ஆனால் எவரும் பெறாததால் வருகிற 28ம் திகதி ஜனாதிபதி தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணைய தலைவர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »