Our Feeds


Tuesday, May 16, 2023

ShortTalk

பொரளை, அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து இளைஞனை வெட்டிக்கொன்ற கும்பல்!



பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த மூவர், அங்கிருந்த நபரொருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இதில் டி.ஆர்.பிரதீப் குமார் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

 

தனிப்பட்ட தகராறு ஒன்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (15) குறித்த வீட்டுக்குள் புகுந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

குறித்த மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »