Our Feeds


Monday, May 22, 2023

ShortTalk

3 வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த தந்தை கைது - அவிசாவளையில் சம்பவம்!



அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது  குழந்தையை தூக்கி வந்து தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று (22)  கைது செய்யப்பட்டதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


அவிசாவளை, தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குழந்தையைத் தரையில் அடித்துவிட்டு, தனது மனைவிக்கு முன்னால் சென்று விஷம் அருந்தியுள்ளார்.

இதனையடுத்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர் அடிப்படை சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »