மியன்மாரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 14 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் மின்கம்பங்கள் கீழே விழுந்து மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.