Rise up Academy மூலம் ரமழான் மாதம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாமிய தெளிவுரை வகுப்புகளில் பங்கேற்று சித்தியடைந்த சகோதரிகளுக்கான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி நுஷ்ரா சரூக் கலந்து கொண்டதுடன், சகோதரிகளின் பங்கேற்புடன் இஸ்லாமிய பட்டிமன்றம், இஸ்லாமிய கேள்வி, பதில் போட்டி நிகழ்வு மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டத்தரணி நுஷ்ரா சரூக் முஸ்லிம் பெண்கள் மார்க்கக் கல்வியிலும், உலகக் கல்வியிலும் ஒருசேர வெற்றியடைய முயற்சிக்க வேண்டும். சமூகத்திற்காகவும், தாய் நாட்டுக்காகவும் சேவையாற்றும் பெண்களாக இஸ்லாமிய பெண்கள் உருவாக வேண்டும். என்பதுடன், தைரியமாக நமது சேவைகளை நாட்டுக்காக முன்னெடுக்க வேண்டியதின் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார்.