Our Feeds


Tuesday, June 6, 2023

News Editor

நில்வள கங்கை பெருக்கெடுப்பு


 காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றிரவு (05) பெய்த கடும் மழை காரணமாக நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளது.

அதன் காரணமாக சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அக்குரஸ்ஸ - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் பாணதுகம பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »