இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்தை ஆதரிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் (SLID) வருடாந்த பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
திவாலான நாடு என்றால் என்ன தெரியுமா?
திவாலான நாட்டிற்குக் கடன் கொடுத்த நாடுகள், பணத்தை இழக்கும். திவாலான நாட்டிற்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகாது! திவாலான நாட்டு அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் தரவே பண நோட்டு அச்சிடவேண்டும்.
ஊழியர்களுக்கு, பண நோட்டு சம்பளமாக வந்தாலும், உற்பத்தி இல்லாமல் பண நோட்டுக்களால் பொருட்களை வாங்க இயலாத நிலை உருவாகும்
