Our Feeds


Saturday, September 2, 2023

News Editor

இங்கிலாந்தில் 150 பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்


 இங்கிலாந்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.


இந்த நிலையில் அங்கு பெரும்பாலான பாடசாலைகள் ஆபத்தான கொன்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 


எனவே கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் குறித்த பாடசாலைகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »