Our Feeds


Saturday, September 9, 2023

SHAHNI RAMEES

செனல் 4 காணொளி - பாதுகாப்பு அமைச்சு வௌியிட்ட முக்கிய அறிக்கை...!

 

செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.



உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான செனல் 4 இன் நிகழ்ச்சியின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை :



இதற்கிடையில் உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நலனுக்காக அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.



மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பாதுகாப்பு அமைச்சு மதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.



செனல் 4 வழங்கிய ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் பலவீனமாக நிரூபிக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எழும் திட்டமிடப்படாத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »