Our Feeds


Wednesday, November 8, 2023

News Editor

கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்


 கொழும்பில் மூன்று மாதங்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“கொழும்பில் நாங்கள் மேற்கொண்ட பூச்சியியல் பரிசோதனைகளின் மூலம், கொழும்பு நகரவாசிகள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமது வளாகங்களில் சிறப்பாக பேணி வருகின்றமை எமக்குத் தெளிவாகத் தெரிந்தது. 

எனினும், 70% க்கும் அதிகமான இடங்கள் டெங்கு-தொற்று வளாகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »