Our Feeds


Saturday, January 20, 2024

News Editor

பணி நீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்கள் 66 ஆக உயர்வு!

 

மின்சார சபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்வடைந்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. 



அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, ஊழியர்கள் கட்டணம் செலுத்தும் பிரிவை மூடி எதிர்ப்பு அரப்பாட்டத்தில் ஈடுபட்டமையின் காரணமாக கணக்குகளை முகாமைத்துவம் செய்யும் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை நேற்று (19) தெரிவித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »