Our Feeds


Thursday, January 25, 2024

SHAHNI RAMEES

மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து - 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 


மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்தனர்.



உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை(19) ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »