Our Feeds


Friday, March 29, 2024

News Editor

சிவனொளிபாத மலையிலிருந்து விழுந்த இந்தியர்

 

சிவனொளிபாத மலைக்கு சென்ற இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மும்பையிலிருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு விழுந்து கிடந்துள்ளார்.

அவர் இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை மலை விளிம்பிலுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் சுற்றுலாப் பயணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »