Our Feeds


Saturday, March 30, 2024

News Editor

அக்கரைப்பற்று - கொழும்பு பஸ் விபத்து


 கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது 

இந்த விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »