Our Feeds


Thursday, April 25, 2024

SHAHNI RAMEES

கொக்குவில் ரயில் நிலையத்திற்கு சீல் வைப்பு

 



கொக்குவில் ரயில் நிலையத்தில் கடமையாற்றிய நிலைய

பொறுப்பதிகாரி இருபது இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


 


இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக ரயில் நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 


சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 


குறித்த ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பயணிகள் பயணச்சீட்டுக்களை பெற யாழ். ரயில் நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »