தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்துமாறு வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், இதுவே ஆரம்பம் எனவும், சம்பளத்தை உயர்த்தும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்தார்.