Our Feeds


Thursday, May 16, 2024

ShortNews Admin

தொழிற்சங்க நடவடிக்கையில் தென் மாகாண தாதியர்கள்

 

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (16) தென் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் போது 15 குழுக்கள் புறக்கணிக்கப்பட்டமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, வடமத்திய மாகாணத்தில் சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக்கிழமை இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »