நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை ஊடாக நாவலப்பிட்டிக்கு
சென்று கொண்டிருந்த இ போ ச பேருந்தின் சாரதி பஸ் ஓடிக்கொண்டிருந்த வேளையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீதியில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து குன்றின் மீது விழவில்லை என்றும், பாறையின் அடிவாரத்தில் உள்ள கான்கிரீட் கட்டில் மோதி விபத்து ஏற்படாமல் தப்பித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அட்டபாகே, உலகம, மெதகொடுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும், நாவலப்பிட்டி லங்காம டிப்போவின் சாரதியாகவும் இருந்த சுரங்க அருணசிறி அத்தனகே (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா - தலவாக்கலை வீதியின் லமேலியர் பகுதியில் பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது சாரதி மற்றும் நடத்துனர் மாத்திரமே வந்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.