Our Feeds


Tuesday, February 18, 2025

Sri Lanka

அதிகரிக்கும் வெப்பநிலை - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கை!


தற்போதைய வானிலை காரணமாக நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, அநாவசிய தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »