Our Feeds


Monday, March 10, 2025

Sri Lanka

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து - இருவர் பலி!


கொழும்பு - கண்டி பிரதான வீதியில் அம்பேபுஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »